Your Ad Here

சினிமாவில் நடித்தது ஏன்? பாலுமகேந்திரா விளக்கம்


   இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும் படம் தலைமுறைகள். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அவர்தான். தாத்தாவுக்கும், மகனுக்குமான உறவைச் சொல்லும் படத்தில் அவரே தாத்தாவாகவும் நடித்திருக்கிறார். இதுவரை ஒரு படத்தில் ஒரு காட்சியில்கூட நடித்திராத பாலுமகேந்திரா இப்போது நடித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

இந்த தலைமுறை இழந்து வருகிற மிகப்பெரிய சொத்து உறவுகள். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தலைமுறைகள் ஸ்கிரிப்ட் எழுதினேன். எழுதி முடித்தவுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் நாம் நடித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கதைக்கு நான் பொருத்தமாகத்தானே இருப்பேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டதோடு எனக்கு நானே போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து ஓகே என்று தோன்றியதும் நடித்தேன்.

மேலும் இது மிகச் சின்ன பட்ஜெட் படம். மற்றவர்களை நடிக்க வைத்தால் அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கணும், அவர்களுக்கு வசதிகள் செய்து தரணும், நடிப்பை வரவழைக்கணும், இவற்றை தவிர்க்கத்தான் நடித்தேன். இதுல நான் நடிச்சிருக்கேன் என்கிறத விட இயல்பா வந்துட்டு போறேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். மற்றபடி என் முகத்தை பெரிய ஸ்கிரீன்ல பார்க்குற ஆசையெல்லாம் இல்லை. ஏன்னா என் முகம் எப்படின்னு எனக்கு நன்றாகவே தெரியும்.இவ்வாறு பாலுமேந்திரா கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்