படக்குழுவினரை அதிர வைத்த நாயகி
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படம் மெய்யழகி.
இந்த படத்தில் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் படங்களில் நடித்துள்ள பாலாஜி கதாநாயகனாகவும், ஜெய்குவேதனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் ஷூட்டிங்கின் போது, 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி ‘டூப்' இல்லாமல் குதித்து அதிர வைத்துள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல் கூறுகையில், கதைப்படி, தம்பியை காணாமல் இரவு முழுவதும் ஊரெல்லாம் தேடிய கதாநாயகி கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கிணற்றுக்கு வந்து பார்க்க, கிணற்றுக்குள் தம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
தம்பியை காப்பாற்ற தன் உயிரை துச்சமென மதித்து கிணற்றுக்குள் குதிக்கிறாள்.
இந்த காட்சியில் 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி டூப் இல்லாமல் குதித்தார்.
ஆண்களே குதிக்க தயங்கும் அந்த கிணற்றில் குதித்ததால், அவர் அதிகமாக தண்ணீர் குடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவருக்கு படக்குழுவினர் முதலுதவி செய்து காப்பாற்றினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சி.எல்.ஆனந்தன் மகன் அருண் வில்லனாக நடித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் அக்காள் ஜெனி ஜாஸ்மின், பாடகர் வேல்முருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
