ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சவுந்தர்யாவின் சொத்து யாருக்கு?
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சவுந்தர்யாவின் கோடிக்கணக்கான சொத்து யாருக்கு என்பதில் அவரது அம்மா, அண்ணிக்கு இடையே பிரச்னை எழுந்தது. பொன்னுமணி, சேனாதிபதி, காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்க தங்கம் உள்பட பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. கடந்த 2004ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சவுந்தர்யா, உடன் சென்ற சகோதரர் அமர்நாத் பலியாகினர். சவுந்தர்யா இறந்த பிறகு அவரது சொத்து யாருக்கு என்று குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. சவுந்தர்யாவின் கணவர் ரகு, சவுந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, அமர்நாத் மனைவி நிர்மலா அவரது மகன் சாத்விக் ஆகியோரிடையே சொத்து பிரச்னை வலுத்தது.
இந்நிலையில் சவுந்தர்யா இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்திருந்ததாகவும் அதன்படி சொத்து தங்களுக்கு சேர வேண்டும் என்று மஞ்சுளா தரப்பிலும், சவுந்தர்யா உயில் எழுதவில்லை. அது போலியான பத்திரம் என்று நிர்மலா தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து பெங்களூர் 4வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட் முன்னிலையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளது. சவுந்தர்யா சம்பாத்யத்தில் வாங்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் பேசி தீர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் சவுந்தர்யா உயில் போலியானது என்று நிர்மலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
