அடுத்த ஆண்டில் திருமதி ஆகிறார் த்ரிஷா!
லேசா லேசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இடம்பிடித்து வருகிறார். அவருக்குப்பிறகு வந்த எத்தனையோ நடிகைகள் சில வருடங்களோடு வெளியேறினாலும், த்ரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே நீண்டகாலம் நீடித்து நடித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே முடிந்து விட்டது.
அதனால் அடுத்தபடியாக புதிய படங்களுக்காக தொடர்ந்து கல்லெறிந்து வந்தார் த்ரிஷா. இருப்பினும் புதிய வரவு நடிகைகளான லட்சுமிமேன்ன, நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் வேகமாக படவாய்ப்புகளை கைப்பற்றிக்கொள்வதால், த்ரிஷா போன்ற மேல்தட்டு நடிகைகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
இந்த நிலையில், சிம்புவை வைத்து கெளதம்மேனன் இயக்கி வரும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்று யாரோ சொல்லக்கேட்டு, அப்படின்னா சிம்பு நடிக்கும்போது நமக்கும் அழைப்பு வரத்தானே செய்யும் என்றுகூட நப்பாசையில் இருந்திருக்கிறார் த்ரிஷா. ஆனால், அதுவும் இப்போது இந்தி நடிகை பல்லவிக்கு சென்றுவிட்டது.
அதனால் இனிமேல் நமக்கு சினிமா சான்ஸ் கிடைப்பது அரிது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் த்ரிஷா. அதனால் இதுவரை கல்யாணம் சம்பந்தமாக பேச்செடுத்தாலே முகத்தை திருப்பிக்கொண்ட த்ரிஷா, இப்போது, க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். அதனால், மகளின் சிக்னலுக்காகவே கடந்த ஆண்டிலிருந்தே காத்திருந்த த்ரிஷாவின் தாய்குலம், மாப்பிள்ளை தேடும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளாராம். அநேகமாக அடுத்து ஆண்டில் த்ரிஷா திருமதி ஆகி விடுவார் என்று தெரிகிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
.jpg)