மீண்டும் காமெடியனாக மாறுகிறார் கருணாஸ்!
பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். அதையடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடியனாக வேகமாக வளர்ந்து வந்தவருககு திடீரென்று ஹீரோ ஆசை ஏற்பட்டது. அதன்காரணமாக, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ஓரளவு வெற்றி பெற்றதால், அதையடுத்து சந்தமாமா, ரகளபுரம், மச்சான் என 3 படங்களில் ஒரே நேரத்தில் ஹீரோவாக நடித்தார் கருணாஸ்.
அதோடு, நல்ல கதைகள் கிடைத்தால் ஒரே நேரத்தில் 10 படங்களில்கூட ஹீரோவாக நடிப்பேன் என்று காமெடி வேடங்களை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் அப்படி அவர் தன்னை ஒரு ஹீரோவாக உயர்த்திக்கொள்வதற்காக தேர்ந்தெடுத்து நடித்த சந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் ஏற்கனவே காமெடியன் மார்க்கெட் சரிந்த நிலையில், இப்போது ஹீரோ மார்க்கெட்டும் சரிந்து கிடக்கிறது.
அதனால் ஹீரோ வேசத்துக்கு தற்காலிகமாக விடை கொடுத்திருக்கும் கருணாஸ், மீண்டும் காமெடியனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் சினிமா வட்டாரங்களில் கூறிவந்தபோதும், புதிய படங்களுக்கு அவரை புக் பண்ண யாரும் முனவராத நிலையில், காதலில் விழுந்தேன படத்தை இயக்கிய பிரசாத், தான் இயக்கி வரும் சகுந்தலாவின் காதலன் என்ற படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்.
நீண்ட நாளைக்குப்பிறகு காமெடியாக நடிக்கும் படம் என்பதால், காமெடி ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்துள்ளாராம். அதைப்பார்த்து படப்பிடிப்பு தளத்திலும் சிரித்தார்களாம். ஆக, இதேபோல் தியேட்டரிலும் ரசிகர்கள் சிரித்து விட்டால், மீணடும் காமெடியில் கல்லா கட்டி விடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் கருணாஸ்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
