குணம் அடைந்தார் சமந்தா: 7ந் தேதி முதல் ஷூட்டிங்கில் பங்கேற்பு!
நடிகை சமந்தா தற்போது லிங்குசாமி தயாரித்து டைரக்ட் செய்யும் பெயரிடப்படாத படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தபோது கடுமையான வெளிச்சத்தின் சூடு தாங்க முடியாமல் அவரது முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்றியது. ஏற்கெனவே தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த சமந்தாவுக்கு மீண்டும் அந்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சமந்தா சிகிச்சை செய்ய சென்றார்.
இதற்கிடையில் சமந்தாவை லிங்குசாமி படத்திலிருந்த நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் சமந்தா இப்படி கூறியிருந்தார் "என் உடலில் உஷ்ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். 2 நாள் ஓய்வெடுத்த பிறகு குணமடைந்து விட்டேன். லிங்குசாமி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நான்தான் நடிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "கடுமையான வெயில் மற்றும் உஷ்ணம் காரணமாக சமந்தா பாதிக்கப்பட்டார். இப்போது அவர் முழுமையாக குணமடைந்து விட்டார். வருகிற 7ந் தேதி முதல் அவர் மும்பையில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"படத்தில் இருந்து சமந்தாவை நீக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. நீக்கிவிட்டதாக வந்த செய்திகள் தவறானது. அவர்தான் என்பட ஹீரோயின் அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று லிங்குசாமியும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
