என்னை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ருதி அறிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை, போரிவிலி திரைப்பட நகர் உதவியாளர் அசோக்சந்தர் திருமுக்கே என்பர் வீடுபுகுந்து தாக்கி உள்ளார். கதவை சாத்திக்கொண்டு ஸ்ருதி தப்பித்திருக்கிறார். இப்போது அசோக்சந்தரை போலீஸ் கைது செய்திருக்கிறது. "நான் ஸ்ருதியை தாக்கவில்லை வேலை கேட்டுத்தான் போனேன்" என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் போலீஸ் நடவடிக்கையில் திருப்தி இல்லாத ஸ்ருதி ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் வேலை கேட்டு வந்ததாக சொல்வது பொய். அவர் பல இடங்களில் என்னை பார்த்திருக்கிறார். என் படப்பிடிப்பு நடந்த இடத்திலும் அவர் இருந்திருக்கிறார். அப்போது அவர் என்னிடம் வேலை கேட்டிருக்கலாமே. என் உதவியாளர்களிடம் கேட்டிருக்கலாமே என் வீட்டுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?
அவர் வேலை கேட்டு என்னை அணுகி இருந்தால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்திருப்பேன். நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். என்வீட்டை திறந்து ஒருவர் அத்துமீறி நுழைந்ததை பெரிய குற்றமாக கருதுகிறேன். இந்த பிரச்னையில் மும்பை போலீசார் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
