சென்னையில் ஷூட்டிங் நடத்த பிரச்னை : மும்பைக்கு படையெடுக்கும் இயக்குனர்கள்
சென்னையில் ஷூட்டிங் நடத்துவதில் பிரச்னைகள் ஏற்படுவதால், தமிழ் பட ஷூட்டிங்கை மும்பையில் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தமிழ் படங்களின் ஷூட்டிங் மும்பையில் நடத்த தொடங்கி உள்ளனர். அஜீத் நடித்த ஆரம்பம் படம் மும்பையில் படமாக்கப்பட்டது. அதேபோல் விஜய் நடித்த துப்பாக்கி, தலைவா என 2 படங்களின் ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது.
தற்போது அவர் நடித்து வரும் ஜில்லா பட ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் மும்பையில் நடக்கிறது. ஜீவா நடிப்பில் உருவாகும் யான் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெறுகிறது. இது தவிர பல படங்கள¤ன் ஷூட்டிங்கை மும்பையில் நடத்துகின்றனர். இதற்கு காரணம், சென்னையில் முக்கிய சாலைகளிலும் பொது இடங்களிலும் ஷூட்டிங்கிற்கு அனுமதி பெறுவதில் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு காத்திருந்து சென்னையில் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்த பின் படமாக்குகிறார்கள். ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு காத்திருக்கும் பொறுமை கிடையாது. அனுமதி உடனடியாக கிடைக்காவிட்டால் மும்பை அல்லது ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்த தயாரிப்பாளருக்கு நெருக்கடி தருகிறார்கள்.
அந்த வகையில் பெரும்பாலான பெரிய படங்களின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. சமீபத்தில் முதல்வரை சந்த¤த்த பெப்சி மற்றும் இயக்குனர்கள¢ சங்கத்தினர் சென்னையில் ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
