காவல் நிலையத்தில் ராதா ஆஜர்: போலீசின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறல்
நடிகை சுந்தரா டிராவல்ஸ் ராதா கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் பைசூல் என்பவர் மீது புகார் கொடுத்தார். தன்னோடு திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்திவிட்டு தனது பணம் நகையை ஏமாற்றி கொண்டு சென்றுவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வடபழனி இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராதா நேற்று வடபழனி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரை போலீசார் தனி அறையில் வைத்து விசாரித்தனர். அவருடன் அவரது வழக்கறிஞரும் இருந்தார். போலீசர் பைசூலுடன் ராதாவுக்கு இருந்த உறவு பற்றி துருவி துருவி கேட்டனர். தாலி கட்டாமலேயே அவருடன் எப்படி 5 ஆண்டுகள் மனைவியாக வாழ சம்மதித்தீர்கள் என்ற கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் திணறினாராம். வேறு யாருடனாவது உங்களுக்கு காதல் இருந்ததா? என்றும் கேட்டுள்ளனர். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்ட பிறகு வருமானத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டதாகவும் தெரிகிறது. பெரும்பாலான கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டே இருந்தாக காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் பைசூல் ராதா தன்னைப்போலவே பலருடன் குடும்பம் நடத்தினார் என்று கூறுவதோடு. அதற்கான ஆதாரங்களையும் திரட்டி விரைவில் கமிஷனரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது-. பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரா டிராவல்ஸ் பட தயாரிப்பாளர் தங்கராஜ் மீதும் ராதா பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
