மும்பையில் முகாமிடும் கோலிவுட் ஹீரோக்கள்!
ஒரு காலத்தில் ஸ்டுடியோக்களில் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை, வயல் வெளிகளுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற இயக்குனர்களும் வெளிப்புறப் படப்பிடிப்புகளில் இறங்கினர். அந்த சமயத்தில் பொள்ளாச்சி பகுதிகளில் பசுமை ஏரியாக்கள் நிறைய இருந்ததால், பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்குதான் நடைபெற்று வந்தன.
அதையடுத்து, மதுரையை களமாகக்கொண்ட கதைகளை அந்த பகுதியிலேயே பாரதிராஜா படப்பிடிப்பு நடத்தியதால், கோலிவுட்டின் கவனம் மதுரைப்பக்கமும் திரும்பியது. அங்கு படமாக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதால், செண்டிமென்டாக மதுரையில் ஒரு நாளாவது படப்பிடிப்பு நடத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு டைரக்டர்களும் நினைத்தனர். அது இப்போது வரை தொடர்ந்து வருகிறது.
ஆனால், இடையிடையே மும்பையிலும் சில படங்கள் படமாகி வந்தன. அது இப்போது அதிகரித்து வருகிறது. விஜய்யின் தலைவா, அஜீத்தின் ஆரம்பம் படங்கள் மும்பை கதைக்களத்திலேயே உருவானதால் இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருகிறது. அதனால் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை மும்பையில் முகாமிட்டே படமாக்கி வருகின்றனர்.
இதையடுத்து கெளதம்மேனன் உள்பட சில முன்னணி இயக்குனர்களும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த லோகேஷன் பார்த்திருக்கிறார்களாம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
