வீட்டில் அத்துமீறி நுழைந்தவன் என்னிடம் வேலை கேட்டு வரவில்லை: சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் பெயர் அசோக் சந்தர் திருமுக்கே (வயது 45). போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக இருக்கிறான். அசோக் சந்தர் மீது தாக்குதல், மானபங்கம், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சுருதிஹாசனை தாக்குவதற்கு அவர் வீட்டிற்கு போகவில்லை என்று அசோக் சந்தர் கூறியுள்ளான். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘சுருதிஹாசனுக்கு உதவியாளர் தேவை என்று கேள்விப்பட்டேன். எனது தம்பி வேலையின்றி இருக்கிறான். இதனால் அந்த வேலையை அவனுக்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன். இதற்காகவே சுருதிஹாசனை நேரில் சந்திக்க சென்றேன்.
படப்பிடிப்பு நடந்த இடங்களில் அவரிடம் பேச முயன்றேன். முடியவில்லை. எனவே, அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பற்றி தெரிந்து கொண்டு அங்கு போய் சந்திக்க முயன்றேன். சுருதிஹாசனை நான் தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அசோக் சந்தர், சகோதரி ஷாலினியும் வேலை கேட்டு போனதாகவே கூறியுள்ளார்.
இதை சுருதிஹாசன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
என் வீட்டில் அத்து மீறி நுழைந்தவர் வேலை கேட்டு வந்ததாக சொல்வது பொய். அந்த நபர் பல இடங்களில் என்னை பார்த்துள்ளார். படப்பிடிப்பு நடந்த இடங்களிளெல்லாம் இருந்து இருக்கிறார். அப்போது வேலை கேட்டு என்னை அணுகவே இல்லை. என் உதவியாளர்களிடமும் அதுகுறித்து அவர் பேசவில்லை. அவர் வேலை கேட்டு அணுகி இருந்தால் முடிந்ததை செய்து இருப்பேன்.
நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். எனது வீட்டில் கதவை திறந்து உள்ளே ஒருவன் நுழைய முயன்றதை பெரிய குற்றமாகவே கருதுகிறேன். மும்பை போலீசார் இப்பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.