கதையை திருடிவிட்டதாக சுசீந்திரன் மீது உதவி இயக்குனர் புகார்
டைரக்டர் சுசீந்திரன் தனது கதையை திருடிவிட்டதாக புகார் கூறி இருக்கிறார் உதவி இயக்குனர். விஷால், லட்சுமி மேனன் நடித்த படம் பாண்டிய நாடு. சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார். கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தின் கதை தன்னுடையது, அதை சுசீந்திரன் திருடிவிட்டதாக புவனராஜன் என்பவர் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,டைரக்டர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றும் பிரபாகரன் என்பவர் எனது நண்பர். சுசீந்திரனின் உதவி இயக்குனர் ஒருவர் என்னை அழைத்து டைரக்டர் புதிய கதை தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். இதையடுத்து இயக்குனரை சந்தித்து நான் எழுதிய 7 கதைகளை சொன்னேன். மணல் கொள்ளையும் அதனால் நடக்கும் பழிவாங்கும் கதை ஒன்றையும் கூறினேன்.
அதை முழுஸ்கிரிப்ட்டாக எழுதும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் புதிய உதவி இயக்குனர்களை கொண்டு பாண்டிய நாடு பட ஷூட்டிங்கை தொடங்கினார். இது நான் சொன்ன மணல் கொள்ளை கதைதான். கிரானைட் கல் கொள்ளையாக மாற்றி படமாக்கி இருக்கிறார். இதுபற்றி புகார் செய்யவில்லை. ஆனால் நான் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக இதுபற்றி சொல்கிறேன் என்றார்.
இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது, புவன ராஜன் என்னை சந்தித்தது உண்மைதான். அவரது உழைப்பை பார்த்து உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள எண்ணினேன். சரித்திர கதையை படமாக்க முடிவு செய்தபோது அதில் அவரை சேர்த்துக்கொண்டேன். பிறகு அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பிறகு பாண்டிய நாடு கதையை தொடங்கினேன். இந்த கதையை திருடவில்லை.
அவர் கொடுத்த ஒரு தகவல் தேனி பக்கம் பழிவாங்க எண்ணுபவர்கள் சம்பந்தப்பட்ட ஆளைபிடித்து கை,காலை ஒன்றாக சேர்த்து கட்டிவிடுவார்கள் என்பதுதான். அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். இதுபற்றி இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்வேன் என்றார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.