வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாத அனுஷ்கா!
சினிமாவைப்பொறுத்தவரை படங்களின் வெற்றிதான் அப்படத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆனால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் அடங்கிய கதைகளாக மட்டுமே ஓ.கே செய்து வந்த அனுஷ்கா, இப்போது அந்த ட்ராக்கில் இருந்து மாறி விட்டார். கதையும், அதில் எனக்குரிய கதாபாத்திரமும் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று ஓப்பனாக சொல்லி படங்களில கமிட்டாகி வருகிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, சினிமாவில் படங்களின் வெற்றிதான் முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.ஆனால், எந்த படம் வெற்றி பெறும், எந்த படம் வெற்றி பெறாது என்பதை இன்னமும் என்னால் கணிக்க முடியவில்லை. நான் இந்த படம் பெரிய ஹிட்டாகும் என்று நம்பி நடிக்கிற படம் தோற்றுவிடுகிறது. இந்த கதை சுமாராகத்தான் இருக்கிறது என்று நினைக்கிற படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி விடுகிறது. இப்படி வெற்றி தோல்வி கணிக்க இயலாத காரியமாக உள்ளது.
அதனால் இப்போதெல்லாம் வெற்றி தோல்வி என்பதைநான் கருத்திலே எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு திருப்திதரக்கூடிய படங்களாக மட்டுமே ஒத்துக்கொண்டு வருகிறேன். அப்படி நடித்த படம்தான் இரண்டாம் உலகம். இதேபோன்று எனது திறமைக்கு சவால்விடக்கூடிய இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் அனுஷ்கா.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
