நடிகர் குள்ளமணி 4 நாட்களாக கவலைக்கிடம் : சினிமா துறையினர் யாரும் வரவில்லை
பழம்பெரும் நடிகர் குள்ளமணி, நான்கு நாட்களாக கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும்,நடிகர் சங்கத்தில் இருந்து யாரும்
அப்போது அவர் கூறியதாவது: என் கணவர், பல படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையினர் பலருடன், நல்லவிதமாக பழகி உள்ளார். கவலைக்கிடமான நிலையில், நான்கு நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த போதிலும், இதுவரை சினிமா துறையினர் யாரும் வந்து பார்க்கவில்லை. இரண்டு முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு, கண் விழித்து பார்க்கிறார்; கை கால்களை அசைக்கிறார்; ஏதேதோ புலம்புகிறார். நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து, நாங்கள் எதையும் எதிர்பார்க்கவி"ல்லை. அவர்களில் யாராவது ஒருவர் வந்து, என் கணவரை பார்த்தால், ஆறுதலாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அவரை பார்க்க வரவில்லை. சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகரில், நடிகர் குள்ளமணி, 61, வசித்து வருகிறார். இவர், ஐந்து தினங்களுக்கு முன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மயங்கிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால், ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மதியம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில், இவரது மனைவி ராணி உடனிருந்து கவனித்து வருகிறார். இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரசிகர்கள் சிலர், நேற்று மருத்துவமனைக்கு வந்து, குள்ளமணியின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். சிலர், பணம் கொடுக்கவும் முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுத்த பணத்தை வாங்க, ராணி மறுத்து விட்டார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.