சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வாலு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே உதிர்ந்து போனது.
அதனால் அதன்பிறகு சிம்புவுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. இருப்பினும், ஒரு படத்தில் கமிட்டான பிறகு அதை முடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மீண்டும் படத்தை முடித்துக்கொடுக்க முன்வந்தார் ஹன்சிகா. ஆனபோதும் இன்னமும் வாலு படப்பிடிப்பு முடியவில்லை. இதையடுத்து, வாலு படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், வாலு படத்துக்காக இதுவரை 80 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்துள்ளேன். ஆனால் இன்னமும் படத்தை முடிக்கவில்லை. அதோடு, கடைசியாக ஒரு பாடல் காட்சியை படமாக்க 3 நாட்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு பட வேலைகள் இருந்தும்கூட, அவர்கள் கேட்ட தேதியை ஒதுக்கிக்கொடுத்தேன். ஆனால், குறித்த நாளில் படப்பிடிப்பு நடத்தாமல் ரத்து செய்து விட்டனர். இதனால் நான் கொடுத்த 3 நாட்கள் கால்சீட்டும் வீணாகி விட்டது.
இப்படி பலமுறை அவர்கள் என் கால்சீட்டை வீணடித்து உள்ளனர். அதனால் இனிமேல் வாலு படத்தில் நடிக்க கால்சீட் கேட்டால் நான் கொடுப்பதாக இல்லை என்று கோபத்துடன் கூறுகிறார் ஹன்சிக.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.