உதயநிதி ஸ்டாலின் தற்போது நயன்தாராவுடன் நடித்து வரும் நண்பேன்டா படத்தில், முதலில் காஜல் அகர்வால்தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
ஆனால் உதயநிதி கேட்ட தேதியை காஜல் அகர்வாலால் ஒதுக்கித் தரமுடியவில்லை. அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தார். இரண்டு மாதம் வரை காத்திருந்த உதயநிதி நயன்தாராவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.
கொடுக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் முன்பணத்தை உதயநிதி பலமுறை கேட்டும் காஜல் திருப்பித் தரவில்லை. அவர் தர ஒப்புக் கொண்டாலும் அவரது அம்மா கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உதயநிதி பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கம் காஜல் அகர்வாலிடமும், அவரது அம்மாவிடமும் உதயநிதி புகார் குறித்து விசாரணை நடத்தி உள்ளது.
“நண்பேன்டா படத்திற்கு கொடுத்த தேதியை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நண்பேன்டாவுக்கு தேதி ஒதுக்கியதால் அந்த நேரத்தில் வந்த ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் முன் பணத்தை திருப்பித் தரமுடியாது” என்று காஜல் அகர்வால் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
“இந்த பதிலை எழுத்துபூர்வமாக தயாரிப்பாளர் சங்கம் கேட்டுள்ளது. அது கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும். அல்லது பிரச்னையை நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிவிடும்” என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
