கதை இல்லாமல் படம் எடுக்கும் பார்த்திபன்
வித்தகன் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பங்ஷன், ஜங்ஷன் என்று பிசியாக இருந்தார் பார்த்திபன். இப்போது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம் (இதற்கு முன் டைரக்ட் செய்த படத்தில் இருந்துச்சாக்கும்னு மைண்ட் வாய்ஸ் கேக்குது). முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பார்த்திபன் நடிக்கவில்லை (அப்பாடா...). சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்தினார்.
அப்போது அவர் படத்தை பற்றி கூறும்போது " கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம், இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேட்பாங்க. அப்படி கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்.
நல்லா யோசிச்சுப்பார்த்தா நாம ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரு எழுதின திரைக்கதையிலதான் நடிச்சிக்கிட்டிருக்கோம். இன்னொருத்தர் எழுதின வசனத்தைதான் பேசிக்கிட்டிருக்கோம். வாழ்க்கையில் அடுத்த நொடி, அடுத்த நிமிடம் நடக்குற விஷயங்கள்தான் கதையை உண்டாக்குது. இன்னும் சொல்லப்போனா வாழ்க்கையில கதைன்னு ஒண்ணு கிடையாது. எல்லாமே சம்பவங்கள்தான். சினிமாலதான் கதை இருக்கும். மதன் கார்க்கி எழுதின "காற்றில் கதை இருக்கு..." என்ற பாட்டுதான் படத்தோட புரமோஷன் பாட்டு. அதை கேட்டீங்கன்னா படம் என்னென்னு தெரிஞ்சுடும். இது சவாலான முயற்சிதான்" என்றார்.
ஒரு சின்ன குறிப்பு: பூஜை நடந்த மறுநாள் மீடியாக்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் பார்த்திபன். அதில் அவர் "தங்கள் முன்னிலையில் என் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் நல் துவக்கமாக்கியதில் மகிழ்ச்சி, வரவேற்பு, உபசரிப்பு மற்றும் என் பேச்சு இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். தொடரும் தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மரியாதைக்கான நன்றியா, இல்லை ஏதாவது புதுமையா? என்றுதான் தெரியவில்லை.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.