Your Ad Here

ஜெயம் ரவி விளக்கம் புறம்போக்கு படத்திலிருந்து விலகியது ஏன்?


   எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்ட் செய்யும் படம் புறம்போக்கு, யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஜெயம்ரவியும், ஜீவாவும் இணைந்து நடிப்பதாக இருந்தது. இப்போது இருவருமே நடிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ஆர்யாவும், விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். புறம்போக்கில் இருந்து விலகியது ஏன் என்பது பற்றி ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஜனநாதன் சாருக்கும் எனக்கும் ஆத்மார்த்தமான நட்பும், புரிதலும் இருக்கிறது. அவர்கூட எப்போது வேண்டுமானாலும் படம் பண்ணுவேன். இப்போது நான் நடித்து வரும் பூலோகம், நிமிர்ந்து நில் இரண்டு படங்களுமே திட்டமிட்டபடி முடிக்காமல் தாமதமாகிவிட்டது. அடுத்து அண்ணன் டைரக்ட் செய்யுற படத்துல நடிக்கப்போறேன். அதுவரைக்கும் ஜனநாதன் சாரை எப்படி காக்க வைக்கிறது. அதனால நாம அப்புறமே சேர்ந்து படம் பண்ணுவோம். இப்போ வேற ஹீரோவை வச்சு பண்ணிடுங்கன்னு சொன்னேன். ஆர்யா, விஜய்சேதுபதி சரியான சாய்ஸ். அந்தப்படத்தோட கதை எனக்குத் தெரியும். பெரிய படம், ஆர்யாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் தங்களோட கேரியர்ல அது முக்கியமான படமாக இருக்கும். நான்தான் மிஸ்பண்ணிட்டேன். அந்த வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்றார் ஜெயம் ரவி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்