கார்த்திக்கு டைரக்டர் கண்டிஷன்
டைரக்டர் போட்ட கண்டிஷனால் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தினார் கார்த்தி. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் பிரியாணி. இப்பட ஷூட்டிங் நடந்தபோது பட யூனிட்டாருக்கு வகைவகையான பிரியாணி பரிமாறப்பட்டது. கார்த்தியும் பிரியாணி பிரியர் என்பதால் வெளுத்துக்கட்டினார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதற்கான புரமோஷன் வேலைகளில் அடுத்த வாரம் முதல் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தனக்கு பிடித்த சுவையான பிரியாணி சாப்பிடுவதை திடீரென்று நிறுத்திவிட்டார் கார்த்தி. அதற்கு காரணம் உடல் எடையை குறைப்பதற்குதான் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது. அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் அடுத்து கபாலி என்ற படத்தை இயக்குகிறார்.
இதில் கார்த்தி ஹீரோ. முழுக்க ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாற வேண்டும் என ரஞ்சித் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். பிடித்தமான பிரியாணியையும் மற்றும் சில ருசியான உணவு வகைகளை அவர் தியாகம் செய்திருப்பது இதற்குத்தான்.
தினமும் ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறும் வகையில் பயிற்சியில் ஈடுபடுகிறார் கார்த்தி. டைரக்டரின் எண்ணப்படி உடல் எடையை குறைக்கும் கார்த்தியை சமீபத்தில் சந்தித்தபோது மெலிந்து காணப்பட்டார்.
அதுபற்றி கேட்டபோது, அடுத்த படத்துக்காக இயக்குனர் மெலிய சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் காய்ச்சல் வந்து தானாகவே மெலிந்துவிட்டேன். இப்போது மெலிவதற்கான வேலை எளிதாகிவிட்டது என்றார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
