Your Ad Here

போராடுகிறாள் மெய்யழகி!


      நேற்று (நவம்பர் 22) மெய்யழகி என்ற படம் ரிலீசானது. 15 வருடங்களாக சினிமாவில் போராடி இயக்குனராகி இருக்கும் ஆர்.டி.ஜெயவேல் என்பவர் டைரக்ட் செய்திருக்கும் படம். காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமான பாலாஜி மனநலம் குன்றிய வாலிபராக நடித்திருக்கிறார். ஆரோகணம் படத்தில் நடித்த ஜெய் குஹேனி பாசமுள்ள அக்காவாக நடித்திருக்கிறார்.

பட்ஜெட் காரணமாக படத்தில் டெக்னிக்கலாக சில குறைபாடுகள் இருந்தாலும் தம்பிக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு அக்காவின் வாழ்க்கையை உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லும் படம். மீடியாக்களும், படத்தை பார்த்த சினிமா பிரமுகர்களும் படத்தை பற்றி பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் படத்தை திரையிட தியேட்டர் இல்லை. விளம்பரம் செய்ய தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. அதனால் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வரவில்லை.

சென்னையில் சத்யம், அபிராமி, பிவிஆர், உதயம், ரோகிணி, காம்பளக்ஸ்களில் ஒரு காட்சியும். அண்ணா, அகஸ்தியா, ஸ்ரீநிவாசா தியேட்டர்களில் ஒன்றிரண்டு காட்சியாகவும் படம் திரையிடப்பட்டுள்ளது. நாளை இந்தப் படத்தில் நடித்த பாலாஜிக்கோ, ஜெய்குகேனிக்கோ, டைரக்டருக்கோ விருதுகள், பாராட்டுகள் கிடைக்கலாம். இன்றைக்கு ஓடினால்தானே படத்தை நம்பி தயாரித்த அந்த புது தயாரிப்பாளருக்கு போட்ட பணமாவது கிடைக்கும். "நல்ல தமிழ் படங்கள் இனி எப்படித்தான் வாழப்போகிறதோ தெரியவில்லை" என்று கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்