Your Ad Here

முன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் சரத்குமார்


  கடந்த மூன்று வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த நடிகர் சரத்குமார் தற்போது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் தோன்ற உள்ளார். அறிமுக இயக்குநர் வேந்தனின் 'வேளச்சேரி' திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சரத்குமார் தோன்றுகின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை இனியா கதாநாயகி வேடத்தில் தோன்ற உள்ளார்.

இந்தப் படம் வேளச்சேரியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம் பற்றி சரத்குமார் கூறும்போது சில துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு எனக்கு ஒரே மாதிரியான வேடங்களே கிடைத்தன. ஆயினும் நான் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என்றார்.

என்கவுண்டர் அதிகாரியாகத் தான் இந்தப்படத்தில் தோன்றுவதாகக் கூறிய சரத்குமார் அதுமட்டுமின்றி உணர்ச்சிமிக்க சம்பவங்களும் இந்தப் படத்தில் கலந்து வருவதாகத் தெரிவித்தார். காவல்துறையினரின் குடும்பத்தவர்கள் இத்தகைய என்கவுண்டர்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை வேந்தன் மிக அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தருகின்றது. இதற்காக நான் எனது உடலை கட்டுக்கோப்பாகக் கொண்டுவருகின்றேன் என்றும் அவர் கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்