ஒரு காலத்தில் கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கியதுண்டு. அந்த அளவுக்கு அவரது மேக்கிங் பிரமாண்டமாக இருந்தது.
அதனால்தான், விஜய்கூட அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். அதையடுத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என அந்த படத்திற்கு டைட்டில் வைத்து விளம்பரம் கொடுத்தார் கெளதம்மேனன்.
பின்னர், படப்பிடிப்புக்கு விஜய்யை அவர் அழைத்தபோது, இன்னும் கதையே சொல்லவில்லையே. அதற்குள் எப்படி நடிப்பது என்றார். ஆனால், யாராக இருந்தாலும் ஒன்லைனை மட்டுமே சொல்லும் பழக்கம் கொண்ட கெளதம்மேனன், அதற்கு உடன்படவில்லை.
அதனால் அப்படத்திலிருந்து விலகினார் விஜய். அதனால் சூர்யாவைக்கொண்டு துப்பறியும் சந்துரு என்றொரு படத்தை இயக்கப்போவதாக அந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார் கெளதம்.
ஆனால், இடையில் என்ன நடந்ததோ, சில மாதங்களிலேயே துருவநட்சத்திரம் என்று சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு பெயர் அறிவித்தார் கெளதம். அதற்கான அலுவலக பூஜைகூட போட்டனர்.
அதையடுத்து சூர்யாவும் கதையை கேட்டபோது மீண்டும் பிரச்னை வெடித்தது. இதனால் சில மாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இப்போது அப்படத்திலிருந்து தான் விலகி விட்டதாக சூர்யாவே அறிவித்து விட்டார். மேலும், அடுத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்காக தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.
இதற்கிடையே, விஜய்யும் இல்லை, சூர்யாவும் இல்லை. அடுத்தபடியாக அஜீத் பக்கம் திரும்பியிருக்கிறாராம் கெளதம். ஏற்கனவே துப்பறியும் சந்துரு படத்தில் நடிக்கயிருந்தவர் அஜீத்தான். சில பல காரணங்களால் அது நடைபெறவில்லை.
ஆனால், அதே படத்திற்காக மீண்டும் அஜீத்தை நாடுகிறாரா? இல்லை துருவ நட்சத்திரத்திற்காகத்தான் செல்கிறாரா? என்கிற விவரம் முழுசாக தெரியவில்லை. ஆனால் அடுத்து அஜீத்தை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று அரக்க பரக்க கெளதம்மேனன் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.