உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு வரிவிலக்கு படங்களை தேர்வு செய்வதில் அரசு பாரபட்சம்
வரிவிலக்குக்கு உரிய படங்களை தேர்வு செய்வதில் தேர்வுகுழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாகவும், கண்ணியமாக எடுக்கப்பட்டு யூ சான்றிதழ் பெறப்பட்ட தனது தயாரிப்பான ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீண்ட புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: வரிவிலக்கு படத்தின் தேர்வு குழுவினர், அதிகாரிகளின் சொற்படி நடக்கிறார்கள். தேர்வு குழு படம் பார்க்கும்போது உறவினர்களை அழைத்து வரக்கூடாது என்ற விதிமுறையை தொடர்ந்து மீறி வருகிறார்கள். படம் பார்ப்பதற்கு முன்பே பரிந்துறை கடித்தை கையெழுத்திட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அதிகாரிகள் தான் வரிவிக்கு கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள்.
எனது ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை படங்கள் ஆபாசமோ, பிறமொழி கலப்போ இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம். அதற்கு வரிவிலக்கு தரவில்லை. வரிவிலக்கு விண்ணப்பங்களை சீனியாரிட்டி படி பரிசீலிக்காமல் வேண்டியவர் வேண்டாதவர் என்ற கணிப்பில் பரிசீலிக்கப்படுகிறது. கடைசி நேரத்தில் தவிக்க விட்டு முதல் மூன்று நாட்கள் வரிகட்ட வைத்து பின்பு வழங்கும் போக்கும் நீடிக்கிறது. வரிவிலக்கு பெற தகுதியிருந்தாலும் இழுத்தடித்துதான் சான்றிதழ் தருகிறார்கள்.
வணக்கம் சென்னை படத்துக்கு வரிவிலக்கு வழங்க பரிந்துரை செய்த குழு உறுப்பினர் மு.ராசேந்திரன் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவவேண்டும். வரிவிலக்கு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
