வாய்ப்பு தந்த யுவனை திணற வைத்த பிரியா ஆனந்த்!
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்கள் பாடுவது பேஷனாகிவிட்டது. ஹீரோக்களைத் தொடர்ந்து ஹீரோயின்களும் தங்கள் படங்களில் ஒரு பாடலை பாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ரம்யா நம்பீசன் ‘பாண்டியநாடு’ படத்தில் ‘பை பை கலாய்ச்சி வை’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் இணையதளங்களில் அதிக ஹிட் அடித்துள்ளது.
இவரைத் தொடர்ந்து பிந்துமாதவியும் இமான் இசையில் பாட வாய்ப்பு கேட்டு வருகிறார். லட்சுமி மேனனும் பாடுவது தனக்கு பிடிக்கும். தான் நடிக்கும் ஒருபடத்திலாவது பாடிவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இந்த ஆசை தற்போது பிரியா ஆனந்துக்கும் வந்துள்ளது.
இவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் தன்னுடைய பாடும் ஆசையை கூறியிருக்கிறார் பிரியா ஆனந்த். யுவனும் அவரை பாட வைக்க முன்வந்தார்.
இதையடுத்து, ஒரு பாடலை கொடுத்து பிரியா ஆனந்தை பாடவைத்தாராம். பல டேக்குகள் வாங்கியும் பிரியா ஆனந்தால் கடைசிவரை அந்த பாடலை சரியாக பாடமுடியவில்லையாம். இறுதியாக ஸ்டுடியோவில் இருந்து யுவன் கொடுத்த பாடலை பாடாமலேயே வெளியே வந்துள்ளார் பிரியா ஆனந்த். இன்னும் சில நாட்களில் பாடும் திறமையை வளர்த்துக் கொண்டு மீண்டும் வந்து பாடப் போவதாக பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
