நான் ஏன் ரகசிய திருமணம் செய்யணும்...? சமந்தா
என் திருமணத்தை பற்றி தவறான செய்திகள் நிறைய வருகின்றன, நான் ஏன் ரகசிய திருமணம் செய்ய போகிறேன் என்று நடிகை சமந்தா கோபப்பட்டுள்ளார். தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் இருப்பதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரவலாக செய்திகள் பரவிக்கிடக்கிறது. ஆனால் இதனை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதனை மறுத்துள்ளார் சமந்தா.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராமய்யா ஒஸ்தாவய்யா படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சமந்தா பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரகசிய திருமணம் குறித்து கேள்விகேட்டபோது கோபப்பட்டார். என் திருமணம் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த நடிகருடன் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மை கிடையாது. நான் ஏன் ரகசிய திருமணம் செய்ய போகிறேன். இப்போதைக்கு என் திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அது நடக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும். என் திருமணம் நடக்கும் போது நானே உங்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக சொல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிற்கு சில காலம் ஓய்வு அறிவித்து இருப்பதாகவும், தமிழ்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டபோவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
