கமல் நம்பிக்கை விஸ்வரூபம்-2-க்கு பிரச்னை வராது
கடந்தமுறை ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிரச்னைகள் எழாது என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கமல்ஹான் நடித்து, இயக்கி, பிரமாண்டமாக தயாரித்த படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் அவ்வளவு எளிதானதல்ல. இந்தநாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் நிலைமைக்கு கமல் தள்ளப்பட்டார். பின்னர் ஒருவழியாக பிரச்னை தீர்ந்து, படமும் இந்தாண்டு துவக்கத்தில் ரிலீஸாகி, வசூலையும் வாரி குவித்தது. இதனையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை மும்முரமாக கமல் இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். படமும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், இந்தமுறை ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிரச்னைகள் எழாது என்று கமல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, குழந்தை நட்சத்திரத்தில் தொடங்கி உதவி நடன இயக்குநராக சினிமாவில் பணியாற்றிய காலம் முதல் இப்போது வரை பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். அறியாமை, அரசியல் பிரச்னைகள் போன்ற காரணங்களால் விஸ்வரூபம் படத்திற்கு பல பிரச்னைகள் கிளம்பின. ஆனால் இந்த முறை அதுபோன்று எந்த பிரச்னைகளும், சர்ச்சைகளும் கிளம்பாது. இந்தப்படத்தை அறிவுப்பூர்மாக அணுகுவார்கள். ‘விஸ்வரூபம்-2’ நிறைய பாராட்டுகளையும், வசூலையும் தரும் என நம்புகிறேன். இந்தாண்டு கடைசியில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், கமலின் திரையுலக பயணத்தை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாள் விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்கு மகிழ்ச்சி. வயதானவர்களுக்கு கொடுக்க வேண்டிய விருதை குறைந்த வயதுள்ள எனக்கு கொடுக்கலாமா என்று சிலர் கேட்கின்றனர், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் கொஞ்சம் பொறுங்கள், இந்த விருதை வேறு யாருக்காவது கொடுக்க நான் யோசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.