பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரனுக்கு இயக்குநராக வேண்டும் என நீண்ட கால ஆசை. ஒளிப்பதிவாளராக பணிபுரிய தொடர்ந்து கமிட்மெண்ட் இருந்ததால் அவரால் டைரக்டர் நாற்காலியில் உட்கார முடியவில்லை. இவரைப்போலவே இயக்குநராக ஆசைப்பட்டு, இயக்குநராகியும் விட்ட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரனுக்கு கூறிய அட்வைஸ் என்ன தெரியுமா? டைரக்டராகணும்னா முதல்ல கேமராமேனாக வொர்க் பண்றதை ஸ்டாப் பண்ணணும். அப்பதான் டைரக்டராக முடியும்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களின் படங்களில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்த ரவி கே சந்திரன்,கே.வி.ஆனந்த் சொன்ன அட்வைஸின்படி அனைத்து படங்களில் இருந்தும் விலகினார். இனி கேமராமேனாக பணிபுரியமாட்டேன் என்ற அறிவித்துவிட்டு, யான் படத்தை இயக்கத் தொடங்கினார். படப்பிடிப்பு முடிந்து யான் படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யான் படம் மிக சிறப்பாக வந்திருப்பதைக் கண்டு தயாரிப்பாளருக்கு ஏக சந்தோஷம். படம் நிச்சயம் வெற்றியடையும் என்று நம்பி பிரம்மாண்டமாக விளம்பரம் செய்ய தயாராகிவிட்டார். இதை எல்லாம் பார்த்ததும், யான் படம் ஹிட்டானால் ரவி கே சந்திரன் முன்னணி இயக்குநராகிவிடுவார், எனவே இப்போதே துண்டைப்போட்டு வைப்போம் என்ற எண்ணத்தில், அடுத்தப்படத்துக்கு நீங்கள் எப்போது கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி வருகிறாராம் ஜீவா. ரவி கே சந்திரனோ புன்னகையை மட்டும் பதிலாக தந்திருக்கிறார்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
