மவனே… நீ மட்டும் மாறுனா காணாமல் போயிருவ! விஜய்சேதுபதிக்கு இயக்குனர் எச்சரிக்கை!
பண்ணையாரும் பத்மினியும் குறும்படமாக வெளிவந்து பாராட்டுக்கள் பெற்ற படம். இக்குறும்படத்தை அதே பெயரிலேயே இயக்கியுள்ளார் எஸ்.யு. அருண்குமார்.
இப்படத்தை எம்.ஆர்.கணேஷ் தயாரித்துள்ளார். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரர் இசையமைத்துள்ளார். மறைந்த கவிஞர் வாலி இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா, நீலிமா, ஜெயப்பிரகாஷ், சினேகா மற்றும பலர் நடித்துள்ள பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைந்தது.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ராம், விக்னேஷ் சிவன் இவர்களுடன் தெலுங்குத் திரைப்பட ஹீரோ நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜய் சேதுபதியை நான் ரொம்ப காலமாக பார்க்கிறேன். ஒரு ஹீரோவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ இப்படித்தான் நடக்கணும், இருக்கணும் என்பதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகும்போது கூட அவரின் குணம் மாறாம அப்படியே இருக்கார். அவரை பார்த்துக்கொண்டு ‘மவனே… நீ மட்டும் மாறுனா இங்கே காணாமல் போயிருவ” ஜாக்கிரதை! என அன்புடன் கண்டிக்கவும் செய்தார்.
மேலும் பேசிய அவர், இன்றைக்கு உள்ள ஹீரோக்கள், இயக்குனர்கள், இண்டு படம் ஓடினதுமே ஏதோ இவர்கள்தான் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் மாதிரி பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி இல்லை. நிச்சயம் பெரிய ஆளா வருவார் என்றார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
