திடீர் தாக்குதல்: ஸ்ருதிக்கு பாதுகாப்பு
ஸ்ருதிஹாசன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவருக்கு இந்தி பட தயாரிப்பாளர் 2 பாடிகார்டுகளை நியமித்துள்ளார்.இந்தி படங்களில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், மும்பை பாந்த்ராவில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். நேற்று காலை அவர் வீட்டு ஹாலிங் பெல் அடித்ததும் கதவை திறந்து ‘யார்?’ என்றார் ஸ்ருதி. அப்போது அந்த மர்ம நபர், ஸ்ருதியின் முகத்தைப் பிடித்து வெளியே இழுத்தான். இதை எதிர்பார்க்காத ஸ்ருதி அவனை வெளியில் தள்ளி கதவை பூட்ட முயன்றார். இதில் அவன் கை மாட்டிக்கொண்டது.
இதையடுத்து கையை இழுத்துக்கொண்டு அவன் ஒடிவிட்டான்.இதுபற்றி ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘இதற்கு முன்பே, மும்பை பிலிம் சிட்டியில் உள்ள மெஹபூப் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கில் இருந்த ஸ்ருதியை பார்க்க வந்தான். அப்போது ‘என்னை தெரியலையா?’ என்று கேட்டுக்கொண்டே அவரது கேரவனில் ஏற முயன்றான். பிறகு ஸ்ருதியின் சிகை அலங்கார நிபுணர் அவனை வெளியே தள்ளினார். பிறகு அவர் காரின் அருகில் வந்து ஏற முயன்றான். இப்போது வீடுவரை வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்றார். இந்தச் சம்பவத்தை அடுத்து ஸ்ருதிஹாசன் நடித்துவரும், ‘வெல்கம் பேக்‘ படத்தின் தயாரிப்பாளர் பிரோஸ் நதிதாவாலா, 2 பாடிகார்டுகளை அவரது பாதுகாப்பு அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இரவு பகலாக ஸ்ருதிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
